இந்திய அணியின் வரப்பிரசாதம்; சூர்யா அற்புதமான தலைவன்: கம்பீர் புகழாரம்

மும்பை: டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமாரை பயிற்சியாளர் காம்பீர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த வடிவில் என்னுடைய வாழ்க்கையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்தோ, ஒரு பேட்ஸ்மேனாக தனது ஷாட்களை அவர் எப்படி தேர்வு செய்கிறார் என்பது குறித்தோ நான் எதுவும் சொல்லவில்லை. அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைக்கலாம் ‘ஆனால், அவர் வீரர்களுடன் தோழமையாக பழகுவது, பேசுவது, உள்ளிட்டவற்றை பார்க்கும்போது ஒரு பயிற்சியாளராக எனது பணி எளிதாகிறது. எவ்வளவு திறமையான கேப்டனாக இருந்தாலும் களத்தில் எவ்வளவு நிதானமாக இருக்கிறார் என்பது தான் முக்கியம்.

இத்தகைய கேப்டன் கிடைப்பது எந்தப் பயிற்சியாளருக்கும் ஒரு கனவாகும். என்னை பொறுத்தவரை, சூர்யா ஒரு வீரராக இருப்பதை கடந்து, தலைவனாக தனது தகுதியை நிரூபித்துள்ளார். அது என் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிவிட்டது. அழுத்தமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் அவரைப் போன்ற ஒருவர் கேப்டனாக இருப்பது இந்திய அணிக்கு வரப்பிரசாதம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: