மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தம்!!

இம்பால்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குள் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பாஜக அரசு மீண்டும் பதவியேற்ற நிலையில் வன்முறை வெடித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே நீடிக்கும் வன்முறை காரணமாக வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது நடந்த வன்முறையில் 9 முதல் 10 வீடுகள் வரை தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் 2 நாட்களில் மட்டும் 30 வீடுகள் வரை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: