தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது. சென்னையில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சியுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக உழைப்போர் உரிமை இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Related Stories: