பெங்களூரு வாலிபர் கனடாவில் சுட்டுக்கொலை: கன்னட சங்கம் தொடங்குவதில் மோதல் காரணமா?

பெங்களூரு: கனடாவில் பெங்களூருவை சேர்ந்த ஐடி வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது உடலை இந்தியா கொண்டு வர ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூரு புறநகர் நெலமங்களா தியாமகொண்டலுவை சேர்ந்தவர் சந்தன்குமார். இவர் கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் டொரன்டோ நகரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங் பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது உடலை மீட்ட அந்நாட்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சந்தன்குமார்(37) என்று அடையாளம் தெரிந்தது.

இந்நிலையில் நெலமங்களாவில் வசிக்கும் சந்தன்குமாரின் பெற்றோர் கூறியதாவது, ‘நாங்கள் ஏழு ஆண்டுகளாக அவனை தாயகம் திரும்பி வந்துவிடு என்று வலியுறுத்தி வந்தோம். அவன் டொரொன்டோ நகரில் கன்னட சங்கத்தை நிறுவ முயற்சி மேற்கொண்டான். இதன் பின்னணியில் தான் அவன் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவனது இறுதி சடங்கு சொந்த மண்ணில் நடக்க உதவியாக அவனது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்’ என்றனர்.

Related Stories: