ஜப்பானில் ஆளுங்கட்சி அபார வெற்றி: பொருளாதார மாற்றத்திற்கு புதிய திட்டம் அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் சனாயே டகாயிச்சி தலைமையிலான ஆளுங்கட்சி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2025ம் ஆண்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்ததால் பொதுமக்கள் வாழ்வாதார ரீதியாகப் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தனர். இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் நிதியை ராணுவத்திற்காகச் செலவிடத் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஜப்பான் பொதுத்தேர்தலில் சனாயே டகாயிச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இன்று ஜப்பான் பங்குச்சந்தையின் நிக்கி குறியீடு 5 சதவீதம் உயர்ந்து 57,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தது. வரும் 18ம் தேதி பிரதமராக மீண்டும் முறைப்படி பதவியேற்க உள்ள டகாயிச்சி, ‘உணவுப் பொருட்கள் மீதான நுகர்வு வரியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வேன்’ என அதிரடி வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், இவருடைய அதீத நிதி ஒதுக்கீடு மற்றும் வரிச் சலுகை திட்டங்களால் கடன் சந்தையில் சில மாற்றங்களும் பிரச்னைகளும் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: