டெல்லி : பாஜக ஆளும் டெல்லியில் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிமன்றத்துக்குள் நடக்கும் வன்முறை, டெல்லியில் குண்டர் ஆட்சி நடைபெறுவதை உணர்த்துவதுபோல் உள்ளது என்று டெல்லி மாநில காவல்துறை ஒன்றிய உள்துறை கட்டுபாட்டில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தினுள் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
