கொழும்பு: உலகக் கோப்பை டி20 தொடர் 6வது போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில், இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீசியது. அதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய இலங்கையின் கமில் மிஷாரா 14, பதும் நிஸங்கா 24 ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர். பின் வந்தோரில் குசால் மெண்டிஸ் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், பவன் ரத்நாயகே 5, துனித் வெல்லலகே 10 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பின் இணைசேர்ந்த குசால் மெண்டிஸ் (ஆட்டமிழக்காமல் 56 ரன்), கமிந்து மெண்டிஸ் (44 ரன்) 5வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஜார்ஜ் டாக்ரெல், பேரி மெக்கார்தி தலா 2, கெரெத் டெலானி, மார்க் அடேர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின், 164 ரன் இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது.
