சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!!

சூடான் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். வடக்கு கோர்டோஃபான் மாகாணத்தில் ரஹாத் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். மத்திய சூடானில் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துணை ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே 2023 முதல் மோதல் நடந்து வருகிறது.

Related Stories: