முத்துப்பேட்டை பேரூராட்சியில் பாதியில் நிற்கும் குடிநீர் விரிவாக்கம் பணிகள்

*கழிவுநீர் தேங்கி மக்கள் அவதி

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு கண்ணாரப்பத்தர் தெருவில் உள்ள கண்ணாரப்பத்தர் சந்து பகுதியில் ஏராளமான குடியிருப்புகள உள்ளன. இப்பகுதி குடியிருப்பு பகுதிக்கு பேரூராட்சி சார்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சப்ளை செய்யும் இணைப்புகள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர்.

ஆனால் பல ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து மக்கள் பலமுறை பேரூராட்சி புகார் தெரிவித்து வந்தனர். அதன் பிறகு சில மாதங்களுக்கு பேரூராட்சி சார்பில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து புதிய குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் நடந்தது.

இந்நிலையில் நன்கு மாதத்திற்கு முன்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று வரை பணிகள் முடக்கிக்கிடக்கிறது.இதனால் அப்பகுதிமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். மேலும் இந்த சிமிண்ட் சாலை சேதமாகி பள்ளம் படுங்குழியாக காட்சி அளிக்கிறது. அதேபோல் கழிவுநீர் வடிகால் குழாய் சேதமாகி அடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளின் வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கிக் கிடக்கிறது.

சில நேரங்களில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. மழைக்காலத்தில் மக்கள் நடந்துக்கூட செல்ல முடிவதில்லை. மேலும் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கடும்நாற்றம் வீசுகிறது. கொசுக்களால் டெங்கு. மலேரியா, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகையால் இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல் முடங்கிக்கிடக்கும் குடிநீர் விஸ்தரிப்பு பணியை உடன் துவக்கி முடிக்க வேண்டும் சேதமான கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தர வேண்டும். சேதமான சிமிண்ட் சாலையை சீரமைக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: