நெல்லை: புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை சந்திப்பில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், ‘‘கடந்த ஜனவரி 7ம்தேதி மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக சட்டசபை தேர்தலுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம்.
தனித்தொகுதிகளில் மட்டுமே நாம் போட்டியிடுவோம் என்பது ஒரு பார்வையாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனித்தொகுதிகளே இல்லாவிட்டாலும் இம்முறை நாம் போட்டியிடுவோம். நெல்லை மாவட்டத்தில் எந்த தொகுதியில் நமக்கு செல்வாக்கு உள்ளது என்பதை கண்டறிந்து அத்தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெறுவோம்’’ என்றார்.
