சென்னை: பராசக்தி பட கதாபாத்திரங்கள், திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை என்று தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. பராசக்தி படத்தின் கதைக்களம் இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை அடிப்படையாக கொண்டிருக்கலாம். தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டதாக இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையை பிப்.9ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்தது .
