ஆசிய பேட்மின்டன் காலிறுதியில் இந்தியா

கிங்டாவ்: சீனாவின் கிங்டாவ் நகரில் ஆசிய குழு பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றில், தாய்லாந்து அணியுடன் இந்திய மகளிர் மோதினர். தனி நபர் போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, மகளிர் இரட்டையர் போட்டியில் காயத்ரி கோபிசந்த், ட்ரீஷா ஜாலி இணை வென்றனர். இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் தோற்றனர். அதனால், 3-2 என்ற கணக்கில் இந்திய குழு தோல்வியை தழுவியது. இருப்பினும் இதுவரை நடந்த போட்டிகளில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் இந்திய குழு காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: