நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காங். பெண் எம்.பி.க்கள் பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்தாக சபாநாயகர் கூறுவது கண்டிக்கத்தக்கது. பிரதமரை தாக்க பெண் எம்பிக்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் கூறியது உண்மைக்கு புறம்பானது. சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: