அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை – காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி

டெல்லி : அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா?; பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: