- பொன்பரப்பி அரசு
- பள்ளி
- Jayankondam
- பொன்பரப்பி அரசு உயர்நிலைப் பள்ளி
- இரண்டாம்நிலை
- முதல்வர்
- ராமலிங்கம்
- உதவி முதல்வர்
- உயர்ந்தது
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
- பஞ்சபகேசன்
ஜெயங்கொண்டம், பிப்.5: பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் .ராமலிங்கம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரோஸ் அனைவரையும் வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பஞ்சாபகேசன் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார். சைக்கிள் பேரணியை தலைமை ஆசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியின் போது தங்களது மிதிவண்டியில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணியில் சென்றனர். பள்ளியில் துவங்கி பொன்பரப்பியில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. சைக்கிள் பேரணி ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் பிரேம்குமார் வேல்முருகன் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்தார் .பட்டதாரி ஆசிரியர் ராஜா நன்றி தெரிவித்தார்.
