டெல்லியில் சோதனை ஓட்டம் வெற்றி; பாரத் டாக்ஸி திட்டம் நாடு முழுவதும் அறிமுகம்: அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: டெல்லியில் 2 மாத சோதனை முயற்சிக்குப் பிறகு, பாரத் டாக்ஸி திட்டத்தை அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாரத் டாக்ஸி திட்டம் கொண்டு வர ஒன்றிய கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது. ஓட்டுநர்களுக்கு நேரடி லாப விநியோகத்துடன் பூஜ்ஜிய-கமிஷன் மற்றும் சார்ஜ் இலவம் திட்டத்தில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டெல்லி- என்சிஆர் மற்றும் குஜராத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் தனியார் டாக்ஸி நிறுவனங்களான ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுத்தது. இந்த தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் டெல்லி-என்.சி.ஆர் மற்றும் குஜராத்தில் தினமும் 10,000 க்கும் மேற்பட்ட சவாரிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஓட்டுநர்களுக்கு நேரடியாக சுமார் ரூ.10 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. சுகாதார காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஆதரவு அமைப்பு மூலம் ‘சாரதிஸ்’ எனப்படும் ஓட்டுநர்களுக்கான சமூகப் பாதுகாப்பை இந்த தளம் முன்னுரிமை அளிக்கிறது. பாரத் டாக்ஸி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கும் கொண்டு செல்ல ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக இன்று இந்த திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

Related Stories: