சுரண்டை,பிப்.5: தென்காசி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் சுரண்டை அருகே இடையர் தவணையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருத்துவத் துணை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சேசு ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பழனி நாடார் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் தர்மராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவசங்கரி, முன்னாள் தலைவர் ராமசாமி, கிளைச் செயலாளர் பேச்சிமுத்து, பொன்னுத்துரை, சீனிவாசன், சண்முகவேல், ராமர், ஜெயக்குமார், தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
