கயத்தாறு, பிப். 5: கயத்தாறு அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் அடுத்த குட்டிக்குளம் முட்புதரில் தெரு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் புள்ளிமான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்த இப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குருமலை வனச்சரகர் காந்தி ராஜா விரைந்து வந்து காயமடைந்த புள்ளி மானை மீட்டு கயத்தாறு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து கயத்தாறு கால்நடை மருத்துவமனை மருத்துவர் (பொறுப்பு) வேதிகா தலைமையில் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குருமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
