×

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 7 பேர் கைது

தூத்துக்குடி, பிப். 5: தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் போலீசார், தெற்கு பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். இங்குள்ள ரோச் பூங்கா அருகே பைக்கில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். பைக்கில் அரிவாளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், பூபாலராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன்(26), தெற்கு ராஜா தெருவை சேர்ந்த சலேத்(24) மற்றும் எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்த அரவிந்த்(24) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து அரிவாள், பைக், செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Thoothukudi ,Thoothukudi South Side ,South Beach Road ,Roche Park ,
× RELATED தூய்மை காவலர்கள் தமிழக அரசுக்கு நன்றி