உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் சிக்கினர்: 5 நாட்களில் 13 பேர் கைது

 

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த பெண் உட்பட 5 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். வங்கதேசத்திலிருந்து ஏராளமானோர் மேற்குவங்க மாநிலம் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி தொழில் நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முறைகேடாக தங்கி பணிபுரிந்து வருவதாக மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருடன் இணைந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பூர் வீரபாண்டி அருகே 4 வங்கதேசத்தினர், நேற்று 15 வேலம்பாளையம் அருகே தம்பதி உட்பட 4 வங்கதேசத்தினர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பூர் விஜயாபுரம் அருகே முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சைபுல் இஸ்லாம் (26), ரஹத்துல்லா (28), மோரியம் (27), ஷாஹ்ரியாலம் (38), தோஹாமினா அக்டர் (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து திருப்பூர் மாநகரில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள பகுதிகளில் வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்.

Related Stories: