திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக இந்தியா வந்து கடந்த ஓராண்டாக திருப்பூரில் வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஐந்து பேரும் சேலம் ஆத்தூரில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து தூதரக ரீதியாக அவர்களின் நாட்டுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
