அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப்புகார்: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியை நிகிதா மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் மரணம் அடைந்த போதே நகை திருட்டு புகார் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நகை திருடப்பட்டதாக அளிக்கப்பட்டது பொய்ப் புகார் என்பது தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் சிபிஐ இன்று பதில் அளித்துள்ளது.

Related Stories: