சென்னை: மூத்த கல்வியாளர் ச.சீ.ராசகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.”மூத்த கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவருக்கு என் அஞ்சலியினை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
