சென்னை: தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும் என 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் என் சகோதரர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது..? அரசாங்கம் அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும், மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
8 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கோருகிறேன் என கூறியுள்ளார்.
