×

தா.பேட்டையில் தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி சாவு

தா.பேட்டை, பிப்.4: தா.பேட்டையில் தனியார் பஸ் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(42). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார்.

தா.பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் ஆறுமுகம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தா.பேட்டை போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர் சுரேஷ்(39). என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Tha.Pettai. ,Tha.Pettai ,Arumugam ,Tha.Pettai Melatheru ,Musiri ,Trichy district ,
× RELATED மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில்...