×

ஆண்டிமடம் வட்டாரத்தில் சம்பூரணதா அபியான் 2.0 திட்டம் முழு இலக்கை அடைவோம்: அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம்,பிப்.4: ஆண்டிமடம் வட்டாரத்தில் சம்பூரணதா அபியான் 2.0 திட்டம் முழு இலக்கை அடைவோம் என்று அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் நிதி ஆயோக் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் சம்பூரணதா அபியான் 2.0 திட்டம் (ஜனவரி 28 முதல் ஏப்ரல் 14 வரை) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்து 4 குறிக்காட்டிகளும், பள்ளிக்கல்வித்துறை குறித்து குறிக்காட்டிகளும், மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து குறிக்காட்டிகளும் முழு இலக்கை அடைவது நோக்கமாக உள்ளது. இவ்விழாவில்., மாவட்ட திட்டக்குழு அலுவலர் தங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்சாமி மற்றும் அன்பழகன்(வ.ஊ/கி.ஊ), குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

 

Tags : Andimadam block ,Jayankondam ,NITI Aayog ,Andimadam ,Ariyalur district ,
× RELATED தூய்மை காவலர்கள் தமிழக அரசுக்கு நன்றி