சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி சென்னையில் வெளியிட்டார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.2,001 கோடியாக உள்ளது. இதர வருமானம் 7 சதவீதம் உயர்ந்து ரூ.245 கோடியாக உள்ளது.
மொத்த லாபம் 18 சதவீதமாக உயர்ந்து ரூ.513 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.332 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.1,31,408 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே 21 சதவீதம் உயர்ந்து ரூ.70,516 கோடியாகவும், ரூ.60,892 கோடியாகவும் உள்ளது.
வங்கியின் நிகர வரா கடன் 0.78 சதவீதமாகவும் வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.53 சதவீதமாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்தாண்டில் இருந்த மதிப்பான ரூ. 9,118 கோடியில் இருந்து ரூ.10,157 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது வரை 902 கிளைகள் மற்றும் 1,678 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
