சென்னை: கடலோடு இணைந்த கீழடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்து நகரக் கூடிய கடலோடு இணைந்த கீழடுக்கு காற்று சுழற்சி தற்போது இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது.
அதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், உள் மாவட்டங்களில் சில இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை 5, 6ம் தேதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். 13, 14ம் தேதிகளில் டெல்டா, வட கடலோரம் தென் மாவட்ட உள் பகுதிகளில் மழை பெய்யும்.
15, 16ம் தேதிகளில் இலங்கையில் மழை பெய்து விலகினாலும், அதற்கு பிறகு தென் கிழக்கு பகுதிகளில் மழை நீடித்துக் கொண்டு இருக்கும். அதன்பிறகு 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கூடுதலாக மழை பெய்யும். அதனால் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இரண்டு காற்று சுழற்சிகள் வங்கக் கடலுக்குள் நுழையும் வாய்ப்புள்ளதால், அடுத்த வாரம் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
