திமுக அமைதி ஊர்வலம்

சிங்கம்புணரி, பிப். 4: சிங்கம்புணரியில் திமுக சார்பில் அண்ணா நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அண்ணா மன்றத்திலிருந்து ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், துணைச் செயலாளர் சிவபுரிசேகர், நகர் செயலாளர் கதிர்வேல், நகர அவைத்தலைவர் சிவக்குமார், அயலகஅணி துணை அமைப்பாளர் புகழேந்தி, பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், ஒன்றிய இளைஞர் அணி மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அதிமுக சார்பாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: