தர்மபுரி, பிப்.4: தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி, பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான திருமகள் தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே குழந்தை திருமணம் இல்லாத இந்தியா, சமரசம் நாடுவீர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி அசின்பானு, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, முதன்மை சார்பு நீதிபதி ஞான பாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி தமயந்தி உட்பட அனைத்து குற்றவியல் நீதிபதிகள், உரிமையல் நீதிபதி, நகராட்சி கமிஷனர் சேகர், வழக்கறிஞர் சங்க தலைவர் அழகுமுத்து, மூத்த வழக்கறிஞர்கள், சட்ட எதிர்காப்பு முறைமை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
