ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

காவேரிப்பட்டணம், பிப்.4: காவேரிப்பட்டணம் பேரூராட்சி அம்பேத்கர் தெரு 5வது வார்டில், 15வது நிதிக்குழு மானிய தொகையிலிருந்து, ரூ.2லட்சம் லட்சம் மதிப்பீட்டில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் பல மாதங்களாக செயல்படாமல் இருந்த மகளிர் நவீன கழிப்பிட கட்டிடத்தை சீரமைத்து, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் பணிகளை ஆய்வு செய்தார். கழிவுநீர் கட்டிடத்திற்கு குடிநீர் வசதி அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹரி நாராயணன், முட்டை மணி, சபரி, அமுதா பழனி, சிற்றரசு, அக்பர், சசி, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: