அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு

வாழப்பாடி. பிப்.4: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வாழப்பாடியில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி தலைமையில் அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துலிங்கம், சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சக்ரவர்த்தி, மாணிக்கம், மூர்த்தி, அன்பு(எ) தங்க மருதமுத்து, மாதேஸ்வரன், சதீஸ்குமார், பேரூர் செயலாளர்கள் செல்வம், வெங்கடேசன், சுப்ரமணியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி வீரேந்திரதுரை உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: