டாஸ்மாக் கடை மீது பீர் பாட்டில் வீசியதால் பரபரப்பு போலீசார் விசாரணை செய்யாறில்

செய்யாறு, பிப். 4: செய்யாறில் டாஸ்மாக் கடை மீது பீர் பாட்டில் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புறவழிச் சாலைேயாரம் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று பகல் 12 மணியளவில் கடை திறக்கப்பட்டு டாஸ்மாக் சூபர்வைசர் மற்றும் சேல்ஸ்மேன்கள் மது விற்பனையில் ஈடுபட்டனர். அப்போது பிற்பகல் 1.30 மணி அளவில் பாட்டில் திருப்பிக் கொடுத்தால் ரூ.10 திருப்பி கொடுக்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது டாஸ்மாக் கடை அருகில் மது பாட்டில்கள் திருப்பி வாங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாட்டில் திரும்ப வாங்கும் ஒப்பந்ததாரர் சில்லறை கொடுக்க இயலாததால் குடிமகன்கள் ஆத்திரமடைந்து அருகிலுள்ள மற்றொரு டாஸ்மாக் கடை மீது பீர் பாட்டிலை வீசி எறிந்து உடைத்து கூச்சலிட்டார்களாம்.

வீசிய மதுபாட்டில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் மீது படவில்லை சுவற்றில் மீது பட்டு உடைந்தது. உடனே ஊழியர்கள் பயந்து கடையை மூடி உள்ளனர். மேலும் அருகில் உள்ள செய்யாறு சுடுகாடு டாஸ்மாக் கடை, பாராசூர் டாஸ்மாக் கடை, பாப்பாதாங்கல் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலை மோதியதால் சில்லறை தட்டுப்பாடு மற்றும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் பாட்டிலுக்கு 10 ரூபாய் திருப்பி கொடுக்கும் திட்டம் நடைமுறை படுத்தும்போதே கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாததால் அச்சமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாலை 4 மணியளவில் 4 டாஸ்மாக் கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் செய்தனர்.

Related Stories: