புழல், பிப்.4: புழல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை, போலீசார் கைது செய்தனர். புழல் அருகே வெஜிடேரியன் நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம் – மாதவரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புழல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் புழல் போலீசார், புழல் அருகே வடபெரும்பாக்கம் – மாதவரம் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே மாறு வேடத்தில் மறைந்திருந்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 ேபரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால், அவர்களை புழல் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(30), சோழவரத்தை சேர்ந்த சரவணன்(31) என்பதும், இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும தெரியவந்தது. அவர்களிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ேமலும், கைதான 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
