நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தக்கடை பகுதியில் இருந்து தென்னை நாறு மஞ்சிக்கயிறு கட்டுகளை ஏற்றிய லாரி சென்னை நோக்கி புறப்பட்டது. சில்வார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(32) லாரியை ஓட்டினார். இன்று காலை குட்டூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் மணிகண்டன் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
