பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்; வளர்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் வளர்ச்சிக்கானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நிதிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் வளர்ச்சிக்கானது. 2047இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் உள்ளது.

ஒன்றிய பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம். வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கான பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும். தொலைநோக்குடன் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார்; உலகத்தின் டேட்டா சென்டர் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: