கடலூர்: எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதிய விபத்தில் காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
