பாட்னா : பீகாரில் அரசு ஊழியர்கள் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகள் தொடங்க இனி உயரதிகாரிகளின் அனுமதி தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேக் ஐ.டி. கூடாது, அரசின் இலச்சினை, அரசுப் பதவிகளை ரீல்ஸ் வீடியோ, புகைப்படத்தில் குறிப்பிடக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
