சென்னை : ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. 3வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
