சென்னை: சென்னை புத்தக காட்சியில் சுமார் ரூ.9 கோடி வரை புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.8ம் தேதி தொடங்கிய சென்னை புத்தக காட்சி நிறைவு பெற்றது. புத்தக காட்சியில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில் 14 லட்சத்துக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டு அதிகளவில் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
