நெல்லை, ஜன. 21: தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமார் 12 பவுன் நகைகளை திருடிய நெல்லையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் முகமது யூசுப். இவர், வெளிநாட்டில் இருந்து கடந்த நவம்பர் 28ம் தேதி ஊருக்கு வந்துள்ளார். இவரை வரவேற்பதற்காக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரம் சென்றனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் தங்ககள் நகை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(29), கான்சாபுரத்தை சேர்ந்த முருகபெருமாள்(23) ஆகியோர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், சுமார் 9 பவுன் நகைகளை பறிமுதல்
செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
