×

ஆண் சடலம் மீட்பு

சிவகாசி, ஜன.12: சிவகாசி அருகே ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி விஏஓ கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Anaikutam Dam ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...