வேன் கவிழ்ந்து விவசாயி பலி

திருச்செங்கோடு, ஜன.9: கரூர் மாவட்டம் ஒப்பிடாமங்கலம், மாமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சுரேஷ் (36). விவசாயம் செய்து கொண்டு, மாடுகள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கரூரிலிருந்து ஒரு மாட்டை விற்பதற்காக திருச்செங்கோடு அடுத்த கருங்கல்பாளையம் சந்தைக்கு தனது வேனில் மாட்டை ஏற்றிக்கொண்டு, சுரேஷ் தோக்கவாடி புதிய ரிங்ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது. வண்டியில் இருந்த மாடு மிரண்டு வண்டி கட்டுப்பாடு இழந்து சரிந்தது. இதில் கீழே விழுந்த சுரேசிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: