சென்னை: மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு டிசம்பர் 22ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; சென்னை மாநகராட்சி சார்பில் கடைகளின் ஒதுக்கீடு தொடர்பான திட்ட வரைபடத்தை தாக்கல் செய்தனர்.
இதை ஆய்வு செய்த நீதிபதிகள் கடைகளை கடந்த உத்தரவின் அடிப்படையில் வந்து கடைகளில் எண்ணிக்கையை 1417 இல் இருந்து 1006 ஆக குறைத்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மை, பேன்சி கடைகள் என 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே சென்னை மெரினா கடற்கரையில்தான் அதிக கடைகள் உள்ளன. மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும். மெரினாவுக்கு நீலக்கொடி சான்று பெற்றதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஜன.20க்கு ஒத்திவைத்தனர்.
