சென்னை: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் நாளை அறிவிக்கும் அறிவிப்பை பொறுத்து அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிவிப்போம்.
