சென்னை: விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியக கண்காட்சியை நாளைமுதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தை பார்வையிட அனுமதி. விக்டோரியா அரங்கத்தை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலை அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்
