×

75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக மீண்டும் சேர்வதற்கு மற்றும் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக மீண்டும் சேர ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6), 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான 6ம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறும்போது, ‘‘இந்த சிறப்பு முகாம் வருகிற 27, 28ம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. புதிய வாக்காளர்கள் படிவம்-6, முன்மொழியப்பட்ட வாக்காளர் சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் வடிவம்-8ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...