×

புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டைச் சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்; கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்லப்பட்டது. இது சட்டப்படி தவறானது. சட்டத்திற்கு எதிரானது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், வாழ்க்கையே அழிந்துவிடும் என்றும் மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி விசாரணைக்கு வந்தது. அப்போது; புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது. மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Tags : New Year ,Chennai ,ICourt ,M. ,Thiruvechat ,Kamesh ,Chennai High Court ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...