முட்டை விலை தொடர் உயர்வு: 635 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 635 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்க தேவை அதிகரித்து வருவதால், முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில், முட்டை விலையில் 15 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.7.50 முதல் ரூ.8 வரை விற்கப்படுகிறது.

Related Stories: