×

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

ராமநாதபுரம்: திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, ஜன.2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எணி 154 பொது (பல்வகை)த் துறை நாள் 03.09.2020- படி, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2026 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 10.01.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 10.01.2026 அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 02.01.2026 வெள்ளிக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிப்ரன்ஜீர் சிங் காலோன்,இ.ஆய், அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ramanathapuram District ,Ramanathapuram ,Governor ,Simranjeet Singh Calon ,Sri Mangalanathaswamy Temple ,Public (Miscellaneous) Department ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...